திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சகலகலா வல்லவன்’. இதில் ஜெயம் ரவி, அஞ்சலி, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் திரிஷா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், கமலுடன் இணைந்து நடித்து வந்த ‘தூங்காவனம்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
இதுதவிர, சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 2’ படத்தில் திரிஷா நடித்து வருகிறார். இப்படம் பேய் படமாக உருவாகி வருகிறது. இதில் ஹன்சிகா, பூனம் பஜ்வா ஆகியோருடன் திரிஷா இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதைத்தவிர, திரிஷா தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இதில் இவர் நடித்து வரும் ஒரு படத்திற்கு ‘நாயகி’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இப்படமும் பேய் படமாக உருவாகி வருகிறதாம்.
ரசிகர்களிடம் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பேய் கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் திரிஷா.