பிரபல மராத்தி நடிகை பூஜா சஞ்சார் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரை இழந்துள்ளார். மகாராஷ்டிராவின் ஹுங்கொளி என்ற இடத்தில் வசித்து வந்த அவருக்கு கடந்த அக்டோபர் 20ம் தேதி நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அதனால் அருகில் Goregaon என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலயத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது.
அதன் பிறகு நடிகையின் நிலையும் மோசமடைந்துள்ளது. அதனால் அவரை Hingoli civil hospital கொண்டுசெல்லுமாறு கூறியுள்ளனர். அது 40 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது.
அங்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் திணறியுள்ளனர். காலதாமதமாக ஒரு தனியார் ஆம்புலன்ஸில் அவரை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நடிகை உயிரிழந்துள்ளார். ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் medico-legal கேஸ் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.