நடிகர் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஷூட்டிங் தள்ளிப்போனதால் கைவிடப்பட்டது மாநாடு படம். அதன்பிறகு பெரிய பஞ்சாயத்து நடந்து தற்போது மீண்டும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சிம்பு.
அதற்கான ஒப்பந்தத்திலும் சிம்பு கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் நாளை சிம்பு ஐயப்ப சாமிக்கு மாலை போடவுள்ளார். 40 நாட்கள் விரதமிருந்து அவர் சபரிமலைக்கு செல்லவுள்ளார்.
இதற்கு முன்பே பல வருடங்களுக்கு முன்பு ´எங்க வீட்டு வேலன்´ பட சமயத்தில் சிம்பு இப்படி மாலைபோட்டு கோவிலுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.