தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே நடிக்க தொடங்கியவர்கள் பலர். அதில் ஒருவர் நாஞ்சில் நளினி. தன்னுடைய 12 வயது முதல் அவர் படங்களில் நடித்து வந்தார்.
4 ஹீரோக்களுக்கு அம்மாவாக அவர் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசனுடன் அண்ணன் ஒரு கோவில், தீர்ப்பு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
கலைமாமணி விருது பெற்ற இவர் மந்திர வாசல், அச்சம் மடம் நாணம், பிருந்தாவனம், சூலம் என பல சீரியல்களில் நடித்துள்ள இவர் நேற்று உடல் நலக்குறைவால காலமானார்.
அவரது மரணத்திற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.