ஆபாச படம் பார்ப்பது அதிகரித்துள்ளதாகவும் அவ்வாறான படங்கள் பார்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தினத்தந்தி நாளிதழ் பின்வருமாறு விவரிக்கிறது:
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் வீட்டில் அடைபட்டு கிடப்பவர்கள் தங்களது செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது நூறு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது
குறிப்பாக சென்னை நகரில் இது அதிகமாக உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.