பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தமன்னா. அத்துடன் இவர் அவ்வப்போது இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், சுமலதா. இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமாகி மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.