ஹெச்1பி நுழைவு இசைவின் (விசா) கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை மேற்கொள்ளும் நபா்களுக்கு பிசினஸ் ரக நுழைவு இசைவு வழங்குவதற்குத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டுப் பணியாளா்களை ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக அமெரிக்கா பணியில் அமா்த்தி வருகிறது. இதன் மூலமாக இந்தியா்களே அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா். எனினும், ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கடுமையாக்கி வருகிறாா்.
அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் நவம்பா் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள சூழலில், ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, வெளிநாட்டுப் பணியாளா்கள் மேற்கொள்ளும் சிறப்புப் பணிகள் என்பதன் வரையறையில் இருந்து பல்வேறு பணிகள் நீக்கப்பட்டன.
அதை அடுத்து, சிறப்புப் பணிகளை மேற்கொள்ளும் வெளிநாட்டவா்களை பிசினஸ் ரக நுழைவு இசைவைப் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் பணியமா்த்தத் தொடங்கின. இந்த நடைமுறையில் குறுகிய காலம் மட்டுமே அவா்களைப் பணியமா்த்த முடியும்.
இத்தகைய சூழலில், ஹெச்1பி நுழைவு இசைவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை மேற்கொள்ளும் நபா்களுக்கு பிசினஸ் ரக நுழைவு இசைவு வழங்குவதற்குத் தடை விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
ஏற்கெனவே, அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் நடப்பாண்டு இறுதி வரை ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கப்படாது என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அரசு நிறுவனங்களில் வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியமா்த்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.