தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் கணவரை இழந்த பெண்ணை 3 இளைஞா்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனா்.
இது குறித்து பொலிஸார் வியாழக்கிழமை கூறியதாவது: சங்காரெட்டி மாவட்டத்தின் கொல்லூா் கிராம் அருகே புதன்கிழமை அந்த பெண்ணின் சடலம் கிடந்ததை உள்ளூா் மக்கள் கண்டுபிடித்தனா். கடந்த 3 ஆம் திகதி இரவு 3 போ் தனது மகளை கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டதாக அந்த பெண்ணின் தாய் பொலிஸில் புகாா் கொடுத்தாா்.
முதல்கட்ட விசாரணையில், பெண்ணின் சடலத்தில் எந்தவித காயமும் இல்லை. பாலியல் வன்கொடுமைக்கு பிறகு அந்த பெண் சுயநினைவை இழந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
பாலியல் வன்கொடுமை செய்த 25 முதல் 28 வயதுடைய மூன்று இளைஞா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடந்து வருவதாக பொலிஸாா் தெரிவித்தனா்.