டுபாயில் முகக்கவசம் அணிவதால் மருத்துவப் பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் முகக்கவசம் அணிய விலக்கு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
முகக்கவசம் அணிவதால் மருத்துவப் பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் விலக்கு கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம், மருத்துவக் குழுவால் ஆராய்ந்து பாதிக்கப்படுவதை உறுதி செய்து அறிக்கை அளிக்கப்படும்.
விண்ணப்பங்களை டுபாய் காவல்துறையின் வலைத்தளம் மூலம் பெறலாம். மருத்துவ அறிக்கைகள் தவிர, சமர்ப்பிக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்களில் விண்ணப்பதாரரின் எமிரேட்ஸ் அடையாள அட்டையும் அடங்கும்.
விண்ணப்பம் மருத்துவக் குழுவால் ஆராய்ந்து, 5 நாள்களுக்குள் செயல்படுத்தப்படும். ஒரு விண்ணப்பதாரருக்கு வழங்கப்பட்ட விலக்கின் செல்லுபடியாகும் தன்மை அவரது உடல்நிலையைப் பொறுத்தது.
மூச்சுத் திணறல் சமந்தப்பட்ட பிரச்னைகள், தோலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
விலக்கு உள்ளவர்களுக்கு முகமூடி அணிவது கட்டாயமில்லை என்றாலும், தங்களையும் மற்றவர்களையும் தொற்று அபாயத்தில் இருந்து பாதுகாக்க முடிந்தவரை பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு தெரிவித்துள்ளனர்.