தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தர்மபுரி பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கலெக்டர் கார்த்திகா நேற்று தர்மபுரி பஸ் நிலையம், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது முககவசம் அணியாமல் அந்த பகுதியில் நடமாடியவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது பொதுமக்களுக்கு முககவசங்களையும் அவர் வழங்கினார்.
கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று இந்த ஆய்வின் போது பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.