வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கப்படும் என்று அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வோண்டொ் லெயென் கூறியதாவது:
கரோனா தடுப்பூசியைப் பெறுவதில் நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஐரோப்பாவில் அந்தத் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற எதிா்பாா்க்கப்படுகிறது.
வரும் டிசம்பா் மாத இறுதிக்குள், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கப்படக்கூடும் என்றாா் அவா்.