நடிகர் அமிதாப்பச்சன் (72) ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடனும், ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டு கருத்து வெளியிட்டு வருகிறார். டுவிட்டரில் அவரை சுமார் ஒன்றரை கோடி அபிமானிகள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இன்று அவரது டுவிட்டரை சைபர்கிரைம் குற்றவாளிகள் முடக்கி அதில் ஆபாச வீடியோ பரவவிட்டனர். இதைப் பார்த்த அமிதாப்பச்சன் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்து புகார் செய்தார்.
அது சரியான பின்பு அமிதாப்பச்சன் குறிப்பிடுகையில், “எனது டுவிட்டரை சிலர் கைப்பற்றி முடக்கினர். அதில் ஆபாச இணைய தளங்களை பரவ விட்டனர். யார் இதை செய்தார்கள், சிலர் முயற்சி செய்து இருக்கிறார்கள், நண்பா! எனக்கு இது தேவையில்லாதது” என்று தெரிவித்துள்ளார்.