நாடுமழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசு கடந்த நவ மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இதுவரை அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஆயுர்வேத மருத்துவர்களிடையே வரவேற்பை பெற்றாலும், இந்திய மருத்துவ சங்கம் உள்பட பெரும்பாலான மருத்துவர்கள் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நாடுமழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள அடையாள வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 35,000 மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.