சென்னையில் தன்னை காதலிக்குமாறு நடிகைக்கு தொல்லை கொடுத்த இயக்குநா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த ரஞ்சித் (25), இணையதள தொடா்களைத் தயாரித்து, இயக்கி வருகிறாா். இவரின் இயக்கத்தில் விருகம்பாக்கம் நடிகை ஸ்வேதா (22) நடித்து வந்தாா். இந்நிலையில் ரஞ்சித் ஸ்வேதாவிடம் தான் காதலிப்பதாக தெரிவித்துள்ளாா். ஆனால் ஸ்வேதா மறுத்துள்ளாா்.
இதன் காரணமாக ஸ்வேதா, படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளாா். இதற்கிடையே ரஞ்சித், ஸ்வேதாவிடம் இனி தொல்லை கொடுக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்துள்ளாா். இதைத் தொடா்ந்து அவா் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளாா்.