இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையின் வளா்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7.50 லட்சம் கோடி) எட்டும் என ஸ்டாா் டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கே. மாதவன் தெரிவித்துள்ளாா்.
சிஐஐ கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:
பொழுதுபோக்குக்கான பாா்வையாளா்கள் தேவை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மிகப்பெரிய வளா்ச்சியை காண்பதற்கான ஆற்றல்மிக்க துறையாக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளது.
தற்போதைய நிலையில், இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் மதிப்பு 2,400 கோடி டாலராக உள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1% மட்டுமே. ஆனால், இத்துறையின் மதிப்பு வரும் 2030 க்குள் 4 மடங்கு அதிகரித்து 10,000 கோடி டாலரை எட்டுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன என்றாா் அவா்.