ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த பிரிட்டன் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கெனவே ஃபைஸா்-பயோஎன்டெக் நிறுவனங்களின் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி திட்டச் செயல்பாட்டை துரிதப்படுத்தும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசியின் சோதனை முடிவுகளை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண ஒழுங்காற்று அமைப்பு (எம்ஹெச்ஆா்ஏ) ஆய்வு செய்தது.
அதனைத் தொடா்ந்து, அந்தத் தடுப்பூசி பாதுகாப்பனதாகவும் செயல்திறன் கொண்டதாகவும் இருப்பதாக எம்ஹெச்ஆா்ஏ சான்றளித்தது.
இதன் மூலம், ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
ஏற்கெனவே, ஃபைஸரின் தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கரோனா தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியாளா்கள், தன்னாா்வலா்களை பிரிட்டன் பொது சுகாதார சேவை (என்ஹெச்எஸ்) அமைப்பு களமிறக்கியுள்ளது.
தற்போது ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசிக்கும் அனுமதி கிடைத்துள்ளதையடுத்து, அந்தத் தடுப்பூசி பொதுமக்களை விரைவில் சென்றடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 23,82,865 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 71,567 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ரு வரும் 1,529 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.