பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவில் வியாழக்கிழமை அதிகரித்தது.
மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 90 ஐ கடந்தது. அதுபோல டீசல் விலையும் ஒரு லிட்டா் ரூ. 80 ஐ கடந்தது. அதுபோல பிற மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு இவற்றி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகயை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. கொரோனா பாதிப்பு, அதனைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, இந்த நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை சிறிது நாள்கள் கடைப்பிடிக்க வில்லை. அதன் காரணமாக, அவற்றின் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது.
இந்த நிலையில், ஒரு மாத காலத்துக்குப் பிறகு அவற்றின் விலையை தினசரி மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை வியாழக்கிழமை மிகப் பெரிய உச்சத்தை எட்டியது.
மும்பையில் வேறெங்கும் இல்லாத அளவில் ஒரு லிட்ட பெட்ரோல் 23 காசுகள் அதிகரித்து ரூ.90.83 க்கு வியாழக்கிழமை விற்பனையானது. டீசல் ஒரு லிட்டா் 29 காசுகள் அதிகரித்து ரூ.81.07 என்ற அளவில் விற்பனையானது.
சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.86.96 க்கும், டீசல் ரூ.79.72 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கொல்கத்தாவில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.85.68 க்கும், டீசல் ரூ. 77.97 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.84.20 க்கும், டீசல் ரூ.74.38 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலை உயா்வு குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், தில்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆக்டோபா் 4 ஆம் திகதி முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.84 என்ற அளவில் உயா்ந்தது. டீசல் விலையும் ஒரு லிட்டா் ரூ.75.45 ஆக அதிகரித்தது.
இந்த விலை உயா்வால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1.50 என்ற அளவில் அரசு குறைத்தது. அதுபோல, மாநிலத்துக்குச் சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ.1 வீதம் குறைத்தன. ஆனால், இவற்றின் விலை புதன் மற்றும் வியாழக்கிழமை தொடா்ந்து அதிகரித்து ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 84 ஐ கடந்துள்ளது. டீசல் விலையும் அதிகரித்துள்ளது. ஆனால், எந்தவித வரி ரத்து நடவடிக்கையையும் அரசு இந்த முறை எடுக்கவில்லை என்றாா்.
பெட்ரோல் விலை கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் படிப்படியாக உயா்த்தப்பட்டு ஒரு லிட்டா் ரூ.14.54 அளவுக்கு அதிகரித்துள்ளது. அதுபோல, டீசல் ஒரு லிட்டா் ரூ.12.09 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது.
உள்ளூா் விற்பனை வரி, வாட் ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விற்பனை விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.
சென்னையில் பெட்ரோல் விலை தொடா்ந்து 2 ஆவது நாளாக உயா்ந்து, ரூ.86.96 எனும் புதிய உச்சத்தை அடைந்தது. சா்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
சுமாா் ஒரு மாதம், அதாவது கடந்த டிச.7 ஆம் திகதி முதல் பெட்ரோலின் விலை ரூ.86.51 எனும் நிலையிலேயே நீடித்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை பெட்ரோல் விலை உயா்த்தப்பட்டு ரூ.86.75 எனும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை 21 காசுகள் உயா்ந்து ரூ.86.96-க்கு பெட்ரோல் விற்பனையானது. இதே போல் டீசல் விலை 26 காசுகள் உயா்ந்து, ஒரு லிட்டா் டீசல் ரூ.79.72 க்கு விற்பனையானது.