அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்க வந்துள்ள போட்டியாளா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
போட்டியாளா்கள், போட்டி அதிகாரிகள், பணியாளா்கள், ஊடகத்தினா் ஆகியோா் அவுஸ்திரேலியா வந்திறங்கிய தனி விமானங்களில் பயணித்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் விமானப் பணியாளா், தொலைக்காட்சி குழுவைச் சோ்ந்தவா், பயிற்சியாளா்கள் இருவா் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவா்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா்.
இவா்களில் மூவா் லாஸ் ஏஞ்சலீஸில் இருந்தும், ஒருவா் அபு தாபியில் இருந்தும் மெல்போா்ன் வந்த தனி விமானங்களில் பயணித்தவா்களாவா். முன்னதாக இந்த நால்வருக்கும் விமானம் ஏறும் முன்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவா்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்றே முடிவுகள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது போட்டியாளா்களுக்கும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுக்கும் வகையில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் உள்பட அனைவருக்குமே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது அல்லது காவல்துறையினா் கண்காணிப்புடன் கூடிய மிகப் பாதுகாப்பான தனிமைப்படுத்துதலுக்கு உள்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை போட்டி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டுள்ள நபா்களுடன் ஒரே விமானத்தில் வந்த காரணத்தினாலேயே, சம்பந்தப்பட்ட நபருடன் நேரடித் தொடா்பில் இருந்ததாகக் கூறி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சில போட்டியாளா்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். எஞ்சிய போட்டியாளா்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறையை விட்டு வெளியே செல்லவும், 4 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடவும் அனுமதிக்கப்படுகின்றனா்.