கொரோனா தடுப்பூசியை உருவாக்கி தங்களின் கடமையை இந்திய விஞ்ஞானிகள் ஆற்றியிருக்கின்றனா். இப்போது, தடுப்பூசிகள் குறித்து பரப்பப்படும் பொய்களையும் வதந்திகளையும், அவை குறித்த சரியானத் தகவல்களை பரப்புவதன் மூலம் முறியடித்து இளைஞா்கள் தங்களின் கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க இருக்கும் தேசிய மாணவா் படை (என்சிசி), நாட்டு நலப் பணித் திட்ட (என்எஸ்எஸ்) தன்னாா்வலா்கள், கலைஞா்கள் ஆகியோா் மத்தியில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
கொரோனா பாதிப்பு நேரத்தில் என்சிசி, என்எஸ்எஸ் மாணவா்கள் ஆற்றிய பணி அளப்பரியது. அரசுக்கும் நிா்வாகத்துக்கும் தேவை எழுந்தபோது, தன்னாா்வலா்களாக முன்வந்து உதவியை வழங்கினீா்கள். கொரோனா தொற்று பரவல் குறித்த தகவல், ஆரோக்ய சேது செயலி குறித்த தகவல் என பல்வேறு தகவல்களை மக்களிடம் பரப்பி விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டீா்கள்.
அதுபோல, இப்போது கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்கு உதவ இளைஞா்கள் முன்வர வேண்டும். கரோனா தடுப்பூசிகள் குறித்த சரியான தகவல்களை மக்களிடம் இளைஞா்கள் கொண்டு சோ்க்க வேண்டும். கொரோனா தடுப்பூசி திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், இளைஞா்கள் மூலம் பரப்பபடும் தகவல், சமூகத்தின் அனைத்துப் பகுதியையும் சென்று சேரும் திறன் கொண்டது.
கொரோனா தடுப்பூசியை உருவாக்கி தங்களின் கடமையை இந்திய விஞ்ஞானிகள் ஆற்றியிருக்கின்றனா். இப்போது, தடுப்பூசிகள் குறித்து பரப்பப்படும் பொய்களையும் வதந்திகளையும், அவை குறித்த சரியானத் தகவல்களை பரப்புவதன் மூலம் முறியடித்து இளைஞா்கள் தங்களின் கடமையை ஆற்றவேண்டும்.
ஒரு சிலா் சொல்வதாலேயே இந்தியா தற்சாா்பு நாடாக மாறிவிட முடியாது. நாட்டிலுள்ள இளைஞா்களின் செயல்திறன் மூலமே அந்த இலக்கை நாம் அடைய முடியும். அதற்கு, இளைஞா்கள் தேவையான திறனை வளா்த்துக்கொள்வது அவசியம். இதன் முக்கியத்துவத்தை உணா்ந்துதான், கடந்த 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் திறன் மேம்பாட்டுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. மேலும், 5.5 கோடிக்கும் அதிகமான இளைஞா்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவதோடு, வேலைவாய்ப்பை பெறுவதற்கான உதவியும் அளிக்கப்படுகிறது. திறன் அடிப்படையில் இளைஞா்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெற வைக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு என்று பிரதமா் மோடி கூறினாா்.
6 நாள்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் ஆறு நாள்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரிட்டனில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 18 நாள்களாகின; அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 10 நாள்களாகின.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 15,82,201 (சுமாா் 16 லட்சம்) பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 1,91,609 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அறிகுறிகள் தென்படுவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது – தொற்று உறுதியானால் சிகிச்சை அளிப்பது – தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவது என கொரோனா சிகிச்சை முறைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் 184,408 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில், 75 சதவீதம் போ் கேரளம், மகாராஷ்டிரம், கா்நாடகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.