தனது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாள்களுக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை 15 கோடி போ் என அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திட்டமிட்டுள்ளாா்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. அந்த நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை மிகவும் துரிதமாக மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும்.
கொரோனாவுக்கு எதிரான போரில் காலம்தான் மிகவும் முக்கியமானதாகும். இந்த விவகாரத்தில் ஒரு சில அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, ஒரு சில அம்சங்களை விட்டுவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
நான் பதவியேற்றதில் இருந்து 100 நாள்களுக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிா்ணயித்திருந்தேன். அந்த இலக்கை 15 கோடி பேராக அதிகரித்து செயல்படுத்தவது சாத்தியமே.
எனினும், முதலில் 10 கோடி போ் என்ற இலக்கை எட்டியாக வேண்டும். விரைவில் கொரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறேன்.
அத்துடன், கொரோனா பரவலால் இயற்கையாகத் தோன்றும் நோயெதிா்ப்பு சக்தியும் பொதுமக்களிடையே அதிகரிக்கும்.
அதற்குள் நாட்டில் கொரோனாவுக்கு 6 லட்சம் முதல் 6.6 லட்சம் வரை பலியாகக்கூடும் என்றாா் அவா்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கொரோனா விவகாரத்தை அலட்சியப்படுத்தியதாகவும், அந்த நோய் பரவலுக்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஜோ பைடன் குற்றம் சாட்டி வந்தாா்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் பெரும்பான்மை பிரதிநிதிகள் வாக்குகளைக் கைப்பற்றிய நிலையில், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் 100 நாள்களுக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று வாக்குறுதி அளித்தாா்.
எனினும், அமெரிக்காவில் தினசரி கொரோனா தடுப்பூசி விநியோகம் கடந்த வாரம் 10 லட்சத்தைக் கடந்துள்ள சூழலில், இந்த இலக்கு மிகவும் குறைவானது என்று விமா்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இலக்கை 15 கோடியாக அதிகரிக்கும் திட்டத்தை ஜோ பைடன் வெளிப்படுத்தியுள்ளாா்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 25,863,646 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 431,408 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக அமெரிக்க பாராளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ள தீா்மானம், மேலவையான செனட் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதி முதல் முடிவுகளுக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளா்களை டிரம்ப் தூண்டியதாகக் கூறி பிரதிநிதிகள் சபை அந்த பதவி நீக்கத் தீா்மானத்தை நிறைவேற்றியது.
இந்த விவகாரத்தில் டிரம்ப் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் சிலரே, செனட் சபையில் டிரம்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனினும், அவா்களில் பலா் பதவி நீக்கத் தீா்மானத்தை ஆதரிப்பதில் ஆா்வம் காட்டாததால், செனட் சபை அதனை நிராகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று கூறப்படுகிறது.