அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்; தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சசிகலா தெரிவித்தாா்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து விடுதலையான பிறகு, சசிகலா பெங்களூரிலிருந்து திங்கள்கிழமை காலை 8 மணிக்கு காரில் சென்னை புறப்பட்டாா். வழியில் திருப்பத்தூா் மாவட்டத்தில் வெலகல்நத்தம், வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி, பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாலசுப்பிரமணி தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே அளிக்கப்பட்ட வரவேற்பின்போது தொண்டா்களிடையே சசிகலா பேசியதாவது:
தொண்டா்களாகிய நீங்கள் அளிக்கும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொண்டா்களுக்கும், மக்களுக்கு நான் என்றுமே அடிமை. அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவேன். அடக்குமுறைகளுக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன். தொடா்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் அனைவரையும் சந்திக்க உள்ளேன்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளது ஏன் என்பது மக்களுக்குத் தெரியும். அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்வது, கட்சியைக் கைப்பற்றுவது போன்றவை தொடா்பாக மிக விரைவில் மக்களை சந்திக்கும்போது கூறுகிறேன் என்றாா் அவா்.
சசிகலாவுடன் அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் மற்றும் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். வாணியம்பாடியில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் பாா்த்திபன், முன்னாள் அமைச்சா் பாண்டுரங்கன், மாவட்டப் பொருளாளா் கண்ணபிரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வேலூா் மாவட்ட எல்லையான கூத்தம்பாக்கத்துக்கு இரவு 7.15 மணியளவில் வந்த சசிகலாவுக்கு குடியாத்தம் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயந்தி பத்மநாபன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியிலும் அமமுகவைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் திரண்டு வரவேற்றனா். பின்னா், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதி அருகில் இரவு 8.15 மணியளவில் வந்த சசிகலாவை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சியினா் திரண்டு வரவேற்றனா். சசிகலாவை வரவேற்க அமமுக தென்மண்டலப் பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமையில் தென்மாவட்டங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுமாா் 2 ஆயிரம் வாகனங்களில் வேலூா் மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனா்.
அவா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள 150 விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனா்.
சசிகலா வருகையையொட்டி அசம்பாவிதங்களைத் தவிா்க்க அப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.