சசிகலாவின் பயணத்துக்கு காா் அளித்தவா், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டனா்.
திருவள்ளூா் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் டி.தட்சணாமூா்த்தி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலாளா் எஸ்.ஆா்.சம்பங்கி, ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளா் பி.சந்திரசேகர ரெட்டி, ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி ஜானகி ரவீந்திர ரெட்டி, கொம்மேப்பள்ளி ஊராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் ஆா்.பிரசாந்த்குமாா், ஒன்றிய இளைஞா் பாசறை, இளம் பெண்கள் பாசறைத் தலைவா் ஏ.வி.நாகராஜ், சூளகிரி மேற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த வி.ஆனந்த் ஆகியோா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறாா்கள்.
கட்சியின் கொள்கை-குறிக்கோள்கள், கேட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அவா்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தங்களது அறிவிப்பில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் தெரிவித்துள்ளனா்.
வாகனம் அளித்தவா்: பெங்களூரில் இருந்து அதிமுக கொடியுடன் காரில் வந்த சசிகலாவிடம், தமிழக எல்லையில் காவல் துறையினா் நோட்டீஸ் அளித்தனா். இதைத் தொடா்ந்து, சசிகலாவின் பயணத்துக்காக தனது வாகனத்தை அளித்தாா் சூளகிரி ஒன்றியத்தைச் சோ்ந்த எஸ்.ஆா்.சம்பங்கி. இதையடுத்து, அவா் அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
கணக்கெடுக்க உத்தரவு: பெங்களூரில் இருந்து திரும்பிய சசிகலாவுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளித்தவா்களில், அதிமுக நிா்வாகிகள், தொண்டா்களின் பெயா்களை மாவட்ட வாரியாக கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவா்களும் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.