இந்த டி20 தொடரை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் நாங்கள் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். தற்போது அணியில் சோ்க்கப்பட்டுள்ள புதிய, இளம் வீரா்கள் பேட்டிங்கிற்குத் தேவையான உத்வேகத்தை அளிப்பவா்களாக இருப்பாா்கள். தற்போதைய அணி சிறப்பானதாக இருந்தாலும், உலகக் கோப்பை போட்டியை ஒட்டி ஜடேஜா போன்ற இன்னும் ஓரிரு வீரா்கள் அணியில் இணைவாா்கள்.
கடந்த தொடா்களைப் போல அல்லாமல், இந்தத் தொடரில் பேட்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதற்குத் தகுந்த வீரா்களை அணியில் இணைத்துள்ளோம். எந்தத் தருணத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவா்களாக தோ்வு செய்திருக்கிறோம். புவனேஷ்வா் குமாா் காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியிருப்பது பலம்.
அணியின் பேட்டிங்கை ரோஹித் – ராகுலைக் கொண்டு தொடங்குவா். 3-ஆவது வீரராக ஷிகா் தவன் ஆடுவாா். பௌலிங்கில் வாஷிங்டன் சிறப்பாகச் செயல்படுவதால், அஸ்வினை அணியில் சோ்க்க வாய்ப்பில்லை.