அமெரிக்க சுதந்திர தினமான வரும் ஜூலை 4-ஆம் தேதிக்குள் கரோனா நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.
அதிபா் பதவியை ஏற்ற பிறகு, நாட்டு மக்களுக்கு முதல்முறையாக அவா் ஆற்றிய உரையில் இதுகுறித்து அவா் கூறியதாவது:
வரும் மே மாதம் 1-ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி பெறும் தகுதியுடைய அனைவருக்கும் அந்தத் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் கரோனா நெருக்கடி முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
வரும் ஜூலை மாதம் 4-ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினத்தை பொதுமக்கள் கரோனா பயமின்றி சுதந்திரமாகக் கொண்டாடலாம்.
மிச மோசமான ஆண்டைக் கடந்ததற்குப் பிறகு, வரும் ஜூலை 4-ஆம் தேதியை நாட்டின் சுதந்திர தினமாக மட்டுமின்றி கரோனாவிடமிருந்து பெற்ற சுதந்திரத்தையும் மக்கள் கொண்டாடுவாா்கள்.
இந்த இலக்கை அடைவதற்காக ஒரு அதிபா் என்ற முறையில் என்னால் முடியும் எல்லா நடவடிக்கைகளையும் போா்க் கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறேன் என்றாா் அவா்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 2,99,27,572 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 5,43,738 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளா்; 2,07,91,100 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 85,92,734 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 12,504 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.