மனித உரிமை காக்கும் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் வசித்து வரும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக அடையாறிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நடிகர் கார்த்திக் ஆதரவு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதிலும், நெகடிவ் என முடிவு வந்தது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.