நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு தனது இறுதி முடிவை அறிவித்துவிட்டார்.
அவரின் முடிவால் முதலில் சோகம் அடைந்த ரசிகர்கள் பின் அவரின் உடல்நலம் முக்கியம், படங்கள் மட்டும் நடிக்கட்டும் என்று ஆறதல் கூறிக் கொண்டார்கள்.
ஹைதராபாத்தில் தர்பார் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்தார்.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என்றனர். ஆனால் எப்போது என தெளிவாக தெரியவில்லை, ரசிகர்கள் தர்பார் அப்டேட்டிற்காக ஆவலாக வெயிட்டிங்.
இதற்கு இடையில் ரஜினிகாந்த் அவர்கள் முதல் படம் நடிக்கும் பிரபலத்தை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளார். அவர் வேறுயாரும் இல்லை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரை நேரில் சந்தித்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாக வைரலாகி வருகிறது.