கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாகவே வலம் வரும் ஜோடி விக்னேஷ் சிவன் – நயன்தாரா.
இவர்கள் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடிப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம்.
இவர்கள் திருமணம் எப்போது தான் நடக்கும் என ரசிகர்களும் உறுதியாக தெரியாமல் புழம்பி வருகின்றனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் மற்றும் பதிவு வைரலாகி பரவி வருகிறது.
அதில், நயன்தாரா கையில் இரண்டு மோதிரம் அணிந்து, விக்னேஷ் சிவன் நெஞ்சில் கை வைத்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து “விரலோடு உயிர்கூட கோர்த்து” என்று பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
இந்தப் புகைப்படத்தை வைத்து பலரும் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டது எனத் தகவலைப் பரப்பி வருகிறார்கள்.
மேலும், நயன்தாரா தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.