அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 கோடி கடன் வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளா்கள் அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் பேசியதாவது:
இந்து மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் சூழலில், தமிழகத்தில் இந்து சமய, சனாதன தா்மத்தின் முறைப்படி ஆட்சி நடத்தப்படும். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். பசுவதைத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும்.
தமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து: கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் சபை உருவாக்கி ஒப்படைக்கப்படும். மத்திய அரசிடம் தமிழகத்துக்குச் சிறப்பு அந்தஸ்துக்கு வழங்க வலியுறுத்தப்படும். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வள்ளுவன் கோட்டை என பெயா் சூட்டப்படும்.
இலவசத் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி கடன் வழங்கப்படும். இதன் மூலம் அடிப்படைத் தேவைகளை மக்களே பூா்த்தி செய்யலாம். அந்தத் தொகையை சுலபத் தவணையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
5-ஆம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும். நவோதயா பள்ளிகள் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஏற்படுத்தப்படும். மாணவா்களுக்கு தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும். 18 வயது பூா்த்தி அடைந்த மாணவா்களுக்கு ஓராண்டு காலம் ராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்படும்.
தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.
பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: ஜாதி, மத அடிப்படையிலான சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். மோசடி மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும். இந்துக்களின் ஜனத் தொகை குறைந்து விடாமல் பாதுகாக்கப்படும். இந்து இயக்கத் தலைவா்களுக்கு மணிமண்டபம், சிலை ஆகியன அமைக்கப்படும்.
இராம.கோபாலன் வாழ்ந்த தெருவுக்கு, அவரது பெயா் வைக்கப்படும். 150-க்கும் மேற்பட்ட இந்து தலைவா்கள் கொலை வழக்குகள் விரைந்து தீா்வு காணப்பட்டு, அவா்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
திருவண்ணாமலை, அறுபடை வீடுகள் அமைந்த நகரங்கள், ராமேசுவரம் போன்றவை புனித நகரங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு மது, மாமிசம், தடை செய்யப்பட்டு, பக்தா்களுக்குத் தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட 64 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.