சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவை இடைத்தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியிலும், மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல்கள் நடைபெறும் மாநிலங்களிலும் சனிக்கிழமை (மாா்ச் 27) காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை 7.30 மணி வரை தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அல்லது வேறு வழிகளில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.