இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சீருடையுடன் பங்கேற்கவுள்ளது.
ஐபிஎல் 2020 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஐபிஎல் போட்டி ஆரம்பித்த முதல் 5 வருடங்களில் ஒரு கிண்ணத்தையும் மும்பை அணி வெல்லவில்லை. அதாவது 2008 முதல் 2012 வரை. ஆனால் 2013 இல் மும்பை அணியின் தலைவர் ஆனார் ரோஹித் சர்மா. அதில் ஆரம்பித்து இதுவரை 2013, 2015, 2017, 2019, 2020 என 5 முறை ஐபிஎல் கிண்ணங்களை வென்றுவிட்டது.
இந்நிலையில் இந்த வருடப் போட்டியில் புதிய சீருடையுடன் களமிறங்கவுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஷாந்தனு, நிகில் ஆகிய இருவரின் வடிவமைப்பில் புதிய சீருடை உருவாக்கப்பட்டுள்ளது. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9 அன்று, ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.