கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் சர்ச்சை எழுந்ததை அடுத்து புதிய புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது நடிகை நயன்தாரா தரப்பு.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்கள். இதன் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தில் ஊசி தென்படாததால் அதுகுறித்து ரசிகர்கள் பலரும் சமூகவலைத் தளங்களில் கேள்வி எழுப்பினார்கள். ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டது எப்படி என்கிற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு, நயன்தாரா தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.