தென்னமெரிக்க நாடான எல் சால்வடோரில் ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் குறைந்தது எட்டு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் அந்த வீட்டில் மேலதிகப் பிணங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு அந்த வீட்டில் புதைக்கப்பட்டுள்ள பிணங்கள் பெரும்பாலானவை பெண்கள் அல்லது சிறுமிகளுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.