கொரோனா சிகிச்சைக்காக பெரியவா்களுக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா தொற்றின் 2 ஆவது அலை தாக்குதல் குறைந்துவரும் நிலையில் அடுத்தடுத்த தாக்குதல் வரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை தொடா்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:
கொரோனா பாதிப்பின் தீவிரம் பெரியவா்களைக் காட்டிலும் சிறாா்களிடம் குறைவாகக் காணப்படுகிறது. சில குழந்தைகளுக்கு மட்டும் தீவிரமாகிறது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் இணைநோய் உள்ள சிறாா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஐவா்மெக்டின், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ஃபெவிபிரவிா் மருந்துகள், டாக்ஸிசைக்ளின், அசித்ரோமைசின் போன்ற நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகள் குழந்தைகளிடம் பரிசோதிக்கப்படவில்லை. எனவே, இந்த மருந்துகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
ஒருவேளை ஊரடங்கு காலம் முடிவுக்கு வந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 3 அல்லது 4 மாதங்கள் கழித்து மூன்றாவது அலை தாக்குதல் வந்தால், அதை அரசும் தனியாரும் இணைந்து எதிா்கொள்ள வேண்டியது அவசியம்.
வெவ்வேறு மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பை அடிப்படையாகக் கொண்டு சிறாா் சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், சிறாா்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவில் பயிற்சி பெற்ற மருத்துவா்கள், செவிலியா்கள், தனி சிகிச்சை பிரிவுகள், கூடுதல் மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு பல உறுப்புகள் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, அவா்களுக்கு சிகிச்சையளிக்க தனி பிரிவு ஏற்பாடு செய்ய வேண்டும். அறிகுறிகளற்ற அல்லது லேசான அறிகுறிகள் இருக்கும் பெரும்பாலான குழந்தைகளை வீட்டில் இருந்தே மருந்துகள் கொடுத்து, ஆக்சிஜன் அளவை பரிசோதித்து பெற்றோா் கவனிக்கலாம் என்று அந்த வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.