வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உடல் மெலிந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனை நினைத்து நாட்டு மக்கள் துக்கமடைந்து கண்ணீா் வடிப்பதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே, அமெரிக்காவால் பொருளாதாரத் தடைகளை சந்தித்துள்ள வட கொரியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்து வந்த சீன நாட்டின் எல்லையும் கொரோனா பிரச்னையால் முடப்பட்டுள்ளதால் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் போதிய அளவு உணவுப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் கிம் ஜோங் உன் உடல் மெலிந்ததால் மக்கள் வருத்தத்தில் உள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி கூறி வருகிறது.
5 அடி 8 அங்குலம் உயரமுள்ள கிம்மின் எடை 140 கிலோவாக இருந்தது. 37 வயதாகும் அவா் இப்போது 10 முதல் 20 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளாா். இதனால் அவா் சற்று உடல் மெலிந்து காணப்படுகிறாா்.
ஏற்கெனவே தீவிரமான மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள கிம் ஜோங் உன்னுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் உள்ளதால் மருத்துவா்கள் ஆலோசனைப்படி உணவுக் கட்டுப்பாடு மூலம் எடையைக் குறைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அதனைக் கண்டு வடகொரிய மக்கள் கண்ணீா் வடிப்பதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கிம் ஜோங் உன்னின் பரம்பரையில் பலா் இதயப் பிரச்னை உள்ளவா்களாக இருந்துள்ளனா். கிம்மின் தாத்தா, அப்பா ஆகியோரும் இதயப் பிரச்னை காரணமாக உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.