இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல், இயக்குநா் ஷங்கா் வேறு படங்களை இயக்கத் தடை கோரிய வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
லைகா நிறுவனம் இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்தது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநா் ஷங்கா் தெலுங்கு படம் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல், இயக்குநா் ஷங்கா் வேறு படங்களை இயக்கத் தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடா்ந்தது.
அதில், படத்துக்கு ரூ.150 கோடி பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதையும் தாண்டி ரூ.236 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இந்த படத்தை இயக்க இயக்குநா் ஷங்கருக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசி, ரூ.14 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநா் ஷங்கா் தரப்பில், லைகா நிறுவனம் நிதி ஒதுக்குவது, படப்பிடிப்புக்கு அரங்கு அமைத்து தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலதாமதம் செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநா் ஷங்கருக்கு தடை விதிக்க கோரிய லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.