குஜராத்தில் ஜூலை 15 முதல் பாடசாலைகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நேற்று 62 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதேசமயம் கரோனாவிலிருந்து 534 பேர் குணமடைந்தனர். தற்போதைய நிலவரப்படி 1,497 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் குஜராத்தில் 100 க்கு கீழ் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஜூலை 15 முதல் 12 ஆம் வகுப்புக்களுக்கான பாடசாலைகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
மேலும் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான கல்லூரிகளும் ஜூலை 15 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என்றும் பாடசாலைகள், கல்லூரிகளில் வருகைப்பதிவு என்பது கட்டாயம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.