டோக்கியா ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் 22 மாநிலங்களைச் சேர்ந்த 119 போ் பங்கேற்கிறார்கள். இவர்களில் 67 வீரர்களும் 52 வீராங்கனைகளும் உள்ளார்கள். 18 விளையாட்டுகளில் 85 பதக்கங்கள் கொண்ட போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. ஜூலை 17 அன்று இந்தியக் குழுவினரின் முதல் அணி டோக்கியோவுக்குப் புறப்படுகிறது. அதில் 90 பேர் அடங்கிய வீரர்களும் அதிகாரிகளும் செல்வார்கள்.
இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காகப் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அனன்யா பிர்லா பாடிய ஹிந்துஸ்தானி வே என்கிற பாடலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் வெளியிட்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.