அதிமுக தொழிற்சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர் முனுசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில், கொரோனா பரவல் காரணமாக அண்ணா தொழிற்சங்க தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி ஏற்கெனவே, 2 கட்டத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது 3 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. சங்க விதிகளின் படி குறிப்பிட்ட காலத்துக்குள் தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேர்தலுக்கு தடை விதிக்காமல் வழக்கின் விசாரணையை 2 வார காலத்துக்கு தள்ளிவைத்தார்.