ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 89 விமானங்கள் மூலம் 12,500 பேரை அமெரிக்க இராணுவம் மீட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 31 க்குள் அனைத்து அமெரிக்கர்களும் தாயகத்திற்கு மீட்கப்படுவார்கள் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதை அடுத்து, கடந்த 15 நாள்களாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு துரிதப்படுத்தியது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை இன்று வெளியிட்ட செய்தியில், “காபூலில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 12,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 35 அமெரிக்க இராணுவ விமானங்கள் மூலம் 8,500 பேரும், 54 கூட்டு விமானங்கள் மூலம் 4,000 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
´´ஆகஸ்ட் 14 ஆம் திகதியில் இருந்து 105,000 பேரும், ஜூன் மாத இறுதியில் இருந்து 110,600 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்´´.