நாமெல்லாம் 100 வயதுவரை வாழ்வோமா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். ஒருவேளை அப்படி வாழ்ந்தாலும், எழுந்து நடமாட முடியுமா? முடியவே முடியாத காரியத்த பத்தி எல்லாம் எதுக்குங்க பேசுறீங்க? நேரா விஷயத்துக்கு வாங்க என்கிறீர்களா?
சரி… விஷயம் இதுதான். ஜப்பானைச் சேர்ந்த 105-வயது தாத்தா ஓட்டப்பந்தயத்தில் உலகையே அம்மாடியோவ்.. என்று அலற வைக்கும் அளவுக்கு ஒரு உலக சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானை சேர்ந்தவர் டோகிசி மியாசாகி. 105 வயதான இவர் சமீபத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 42.22 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். 105 வயதுடையவர்களுக்கான பிரிவில் உலகிலேயே அதிவேக ஓட்டக்காரர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஓட்டப்பந்தயத்தில் 105 வயதுடையவர்களுக்கான ஒரு பிரிவை ஏற்படுத்திய பெருமையும் இந்த கிரேட் தாத்தாவையே சேரும். 105 வயதில் இவர் இவ்வாறு அதிவேகமாக ஓடுவது மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவர் தனது வேகத்தில் திருப்தி இல்லை என்று கருதுகிறாராம்.
இதில் மற்றொரு வியப்பு என்னவென்றால், உலகப்புகழ் பெற்ற அதிவேக ஓட்டக்காரர் உசேன் போலட்டுடன் போட்டியிடுவதுதான் அவரது லட்சியமாம். மேலும் பல சுவாரஸ்யங்கள் உங்கள் முன் வீடியோவாக….