பிரபல வானொலியில் பணியாற்றி வந்த செந்தில் சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் தலையை காட்டினார். இதை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் ஒரு பிரபல சீரியலில் நடித்தார்.
அந்த சீரியல் மிகவும் ரசிகர்களை கவர, சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்தவரையே திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இவரை போலிஸ் கைது செய்து தரதரவென இழுத்து செல்வது போல் ஒரு வீடியோ உலா வருகின்றது.
இது படத்திற்கான படப்பிடிப்பு என்று சிலர் கூறி வருகின்றனர், ஆனால், அங்கு படப்பிடிப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது போலவும் தெரிகின்றது. எது எப்படியோ…சினிமா பிரபலமாகிவிட்டாலே பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.