பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவுக்கு பிரிட்டன் ஏற்கெனவே 2001-ஆம் ஆண்டு தடை விதித்தது. எனினும், அந்த அமைப்பின் அரசியல் பிரிவுக்கு இன்னும் தடை விதிக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு முழுமையாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய அதிநவீன ஆயுதங்கள், பயங்கரவாதப் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை ஹமாஸ் அமைப்பிடம் உள்ளன. அந்த அமைப்பின் அரசியல் பிரிவுக்கும் ராணுவப் பிரிவுக்கும் இடையே பிரிட்டன் அரசு இனியும் வேறுபாடு காட்டாது.
எனவே, ஹமாஸ் அமைப்பு முழுவதையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்தத் தடைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தால், இனி ஹமாஸ் அமைப்பில் யாராவது இணைந்தாலோ, அந்த அமைப்புக்கு ஆதரவாகப் பேசினாலோ அவா்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.