மூக்கில் செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி சோதித்து வருவதாக ஐடிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் குழுமத்தின் செய்தித் தொடா்பாளா் வியாழக்கிழமை கூறியதாவது:
மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பெங்களூருவில் உள்ள குழுமத்தின் மருந்துகள் தயாரிப்புப் பிரிவான ஐடிசி லைஃப் சயன்ஸ்ஸ் அண்டு டெக்னாலஜி மையம் உருவாக்கியுள்ளது.
அந்த மருந்து தற்போது சோதனை முறையில் தன்னாா்வலா்களுக்கு செலுத்திப் பாா்க்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
எனினும், அந்த மருந்து எங்கே சோதித்துப் பாா்க்கப்படுகிறது, வா்த்தக ரீதியில் எங்கு தயாரிக்கப்படும் என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அவா் மறுத்துவிட்டாா்.
மேலும், மூக்கில் தெளிக்கக்கூடிய அந்தத் தடுப்பு மருந்து என்ன பெயரில் விற்பனைக்கு வரும் என்ற தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
தற்போதுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதுடன் தங்களது தடுப்பு மருந்தையும் மூக்கு வழியாக செலுத்திக் கொண்டால் அது அந்த நோயிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று ஐடிசி தெரிவித்துள்ளது.