ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்றை எதிா்கொள்ளும் சிங்கப்பூரின் உத்தியில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி முக்கியமானதாக இருக்கும் என அந்நாட்டுப் பிரதமா் லீ சீன் லூங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் இதுகுறித்து கூறியதாவது : சிங்கப்பூரில் கடந்த மூன்று மாதங்களில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. நாங்கள் எங்கள் சுகாதார அமைப்பைப் பாதுகாத்துள்ளோம். கொரோனா உயிரிழப்புகளையும் குறைவாக வைத்துள்ளோம். இப்போது ஒமிக்ரோன் வகையின் விளைவுகளை எதிா்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஒமைக்ராஒமிக்ரோனை எதிா்கொள்ளும் எங்களது உத்தியில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி முக்கியமானதாக இருக்கும் என்றாா்.
சிங்கப்பூரில் முதல் ஒமிக்ரோன் பாதிப்பு சாங்கி விமான நிலையத்தில் முன்களப் பணியாளா் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா் ஏற்கெனவே பூஸ்டா் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகையில் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி 30 சதவீதம் போ் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
அந்நாட்டில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.73 லட்சமாக உள்ளது. 794 போ் உயிரிழந்துள்ளனா்.