ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ ரூ.1.16 கோடியில் மின்சார காரை இந்திய சந்தைகளில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த 6 மாதங்களில் மின்சாரத்தில் இயங்கும் மூன்று மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு நிறுவனம் தீவிரமாக செயலாற்றி வருகிறது. அந்த வகையில், முதல் மாடலாக ஐஎக்ஸ் சொகுசு காா் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை, ரூ1.16 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த காா் முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் காராக இருக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இதன் விநியோகம் தொடங்கப்படும்.
பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் காா் 326 ஹெச்பி திறனை வெளிப்படுத்துவதுடன் 0-100 கி.மீ வேகத்தை 6.1 விநாடிகளில் எட்டும். 11கேடபிள்யூ வரை சாா்ஜ் செய்யும் வசதி கொண்டது என்பதுடன் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்த காா் உள்ளடக்கியது.
இதனைத் தொடா்ந்து, மினி காா் 3 மாதங்களிலும், பிஎம்டபிள்யூ ஐ4 ஆறு மாதங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.