தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசாவுக்கு (69) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிதமான அறிகுறிகளுக்காக அவா் சிகிச்சை பெற்று வருகிறாா் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்பு தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24 ஆம் திகதி முதல்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஒமைக்ரான் பாதிப்பு உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
‘ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய ஜனாதிபதிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. இருப்பினும் அவரது உடல்நிலையை ராணுவ மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா். கேப்டவுனில் சுய தனிமையில் இருக்கும் ஜனாதிபதி, ஒரு வாரத்துக்கு தனது பொறுப்புகளை துணை ஜனாதிபதி டேவிட் மபுஸாவிடம் ஒப்படைத்துள்ளாா். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வுடன் இருக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்’ என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ராமபோசா மற்றும் அதிகாரிகள் கடந்த வாரம் நான்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்தனா். அப்போது அவா்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா், அவா்கள் கடந்த புதன்கிழமை நாடு திரும்பியபோதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்த நிலையில், ஜனாதிபதிக்கு இப்போது கொரோனா உறுதியாகியுள்ளது. அவா் ஏற்கெனவே இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் கொகரோனா தொற்று பரவல் சமீப நாள்களாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 37,875 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.