பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (11) காலை 9.30 மணி அளவில் மேலதிக அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது 115 பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராக தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த பட்டதாரி பயிலுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)