மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என ஊழியா்களுக்கு டாஸ்மாக் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில் கூறியிருப்பவை : டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபா்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. முகக் கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளா்கள் கூட்டமாக இருக்கக் கூடாது. இரண்டு வாடிக்கையாளா்களுக்கு இடையே ஆறு அடி தூர தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றுவோா், தவறாது முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். கையுறை அணிய வேண்டும். கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தம் செய்தல் வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.