சீனாவின் ‘பூஜ்ஜிய கொரோனா’ கொள்கையைக் குலைக்கும் வகையில் அங்கு அண்மைக் காலமாக அந்த நோய் புதிதாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மேலும் ஒரு நகரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக ஷியான் மற்றும் தியான்ஜின் நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது 55 லட்சம் மக்கள்தொகை கொண்ட அன்யாங் நகரில் கடந்த சனிக்கிழமை முதல் 84 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நகரிலும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.