கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதான தமிழக அரசு கூறியிருக்கிறார்கள். அனைவரும் இந்த 3வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் பயத்துடன் தான் இருக்கிறார்கள்.
அதிகமாக இப்போது பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தனது சமூக வலைதளங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா கொரோனா நோய் தொற்றில் இருந்து வெளியே வந்துவிட்டதாக புகைப்படத்துடன் கூறியுள்ளார்.
அவரது போட்டோவை கண்ட ரசிகர்கள் சந்தோஷம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.